சாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்!!-இம
சாப்பிட்டுவிட்டு உழைக்க சொல்வதற்கு மற்றொரு முக்கிய காரணம்!!-இம
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.
செல் எண்கள்: 9442035291;7092209028
சாப்பிட்டுவிட்டு நடைபயிற்சி
செய்யும்போது, நன்றாக செரிக்கிறது.. அவ்வாறு செரிக்கும்போது கழிவுப்பொருட்கள் கழிக்கபடுகின்றன.
அவ்வாறு கழிக்கபடும் கழிவுப்பொருட்கள், கெட்டநீர், வாய்வு, சளி, நெஞ்சை அடைத்துக்கொண்டிருக்கும் ஏப்பம் முதலியன. நடக்கும்போது அந்த கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன. கெட்டநீரின் ஒரு பகுதி வியர்வையாக வெளியேறுகிறது.
நடைபயிற்சி செய்யாவிட்டால்,
வியர்வையாக வெளியேறும் கெட்ட நீர் அடைபட்டு, மறுநாள் காலையில் உடல் முழுவதும் நீர்க்குமில்கள்
ஏற்பட்டு, அந்த நீர்க்குமில்களை உடைக்க, உடலானது அரிப்பை உண்டாக்குகிறது. நீங்கள் அரிப்பினால்
சொரண்டும்போது, நீர்க்குமில்கள் உடைபட்டு, கெட்டநீர் வெளியேற்றபடுகிறது. அதேபோல, மற்ற கழிவுப்பொருட்களால், தும்மல், மூக்கடைப்பு,
மூக்கில் நீராக ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டுதல் முதலிய நோய்கள் மறுநாள் தோன்றுகின்றன..
அதனால் பசியின்மை, மலசிக்கல் அரிப்பு மற்றும் மேற்கூறிய நோய்கள் முதலியன வராமலிருக்க
நீங்கள் சாப்பிட்ட பிறகுதான் நடக்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு நடக்காமல்,
அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்யும்போது, செரிக்கிறது. ஆனால் செரிக்கும்போது உற்பத்தி
செய்யபடும் கழிவுப்பொருட்கள் வெளியேறுவதில்லை. அதனால் மேற்கூறிய நோய்கள் வந்துவிடுகிறது.
வெறும் வயிற்றில் நடக்கும்போது,
வயிற்றில் உணவில்லை, அதனால் செரித்தலில்லை; ஆற்றலும் இல்லை; கழிவுப்பொருட்களின் உற்பத்தியும்
இல்லை. நடப்பதற்கு வேண்டிய ஆற்றலை, உடல், செல்களின் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்கிறது.
ஆற்றலின் சேமிப்பு குறைவதால், உடல் பலவீனமாகி, நோய்கள் பற்றுகின்றன.
ஹீலர் அரோமணி
தயவுசெய்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment