எதற்கும் பரிகாரம் கிடையாது!
அரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.
சிறப்பு அம்சம்: மருத்துவமனைக்குள் நோயாளியாக நுழைபவர் டாக்டராக வெளிவருகிறார்.செல் எண்கள்: 9442035291;7092209028 எதற்கும் பரிகாரம் கிடையாது!
சிவகங்கையில்,
பரிகார பூஜைக்கு கூடுதல் பணம் தராததால், ஆத்திரம் அடைந்த சாமியார், மூதாட்டியை கொன்று,
கணவரையும் காயப்படுத்திவிட்டு, நகைகளையும் எடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார் சாமியார்
ஒருவர். இது சமீபத்தில் வந்த செய்தி. பரிகாரம் என்பதில் உண்மை கிடையாது. எதில் உண்மை
இல்லையோ அதில்தான் மக்களை ஏமாற்ற முடியும். இந்து மதம், செய்த பாவத்திற்கு பரிகாரம்
கிடையாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது
ஜோதிடம்
அறியபட்ட காலத்தில், பரிகாரம் என்று ஒன்று இல்லை. பிற்காலத்தில், உருவ வழிபாட்டை வலிமைபடுத்தவும்,
நிலை நாட்டவும், ஜோதிடத்தில் இடைச் செருகலாக கொண்டுவரப்பட்டதுதான் பரிகாரம். அதனால்தான்,
பரிகாரங்களுக்கெல்லாம் கோவில்களுக்குப் போகச் சொல்லி ஜோதிடர்கள் பரிந்துரைப்பார்கள்.
பரிகாரம்
என்பது, இந்த நிமிடம் முதல் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் எவருக்கும் தீங்கு
செய்யாதிருப்பதுதான். உயிரினங்கள் அனைத்திற்கும் தான தர்மங்கள் செய்வதும், உதவியாகவும்
உறுதுணையாக இருப்பதுதான். பாவதட்டு ஏறி, புண்ணியதட்டு இறங்கும்.
ஹீலர் அரோமணி ..
தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment